பாழாக்கும் பயணத்தில் முந்து கின்றார்-நாட்டில்
பயனுள்ள வேலையில் பிந்து கின்றார்!
ஆழமாய் மதவெறி ஊட்டு கின்றார் -
நாட்டில் ஆனவரை பகையை மூட்டு கின்றார்!
மனித நேயத்தில் மண்ணை வைப்பார்-மனதில்
மதமான பேயிடம் எண்ணம் வைப்பார்!
சனியெனப் பரிவாரச் சங்கம் வைப்பார்-
காசி சங்கமம் என்றே தமிழ ழிப்பார்!
பன்முகத் தன்மைக்கு வேட்டு வைப்பார்-
இந்தியப் பண்பாட்டு முகத்திலே சூட்டை வைப்பார்!
ஒன்றாக இருப்பதை ஒழிக்கப் பார்ப்பார்-
அவர் உடலெலாம் விடமதைக் கக்கி நிற்பார்!
கடவுளைக் கூடப் பிரித்து வைப்பார்-
கோயில் கருவறை தன்னிலே கயமை செய்வார்!
மூடத் தனத்திலே மூழ்கி நிற்பார்-
பிறர் மூளையில் அதனைத் திணிக்கப் பார்ப்பார்!
பொய்யே வாழ்வெனப் போற்றிக் கொள்வார்-
நாம் போற்றிடும் வாய்மையைத் தூற்றிச் செல்வார்!
கயமைக் குணத்தினால் கலகம் செய்வார் -
அந்த கழிவுகள் தொடர்ந்தால் எதையும் செய்வார்!