articles

எதையும் செய்வார் கோவி.பால.முருகு

பாழாக்கும் பயணத்தில் முந்து கின்றார்-நாட்டில்  

   பயனுள்ள வேலையில்  பிந்து கின்றார்!

ஆழமாய் மதவெறி  ஊட்டு கின்றார்  -

நாட்டில்      ஆனவரை  பகையை மூட்டு கின்றார்!  

மனித நேயத்தில் மண்ணை வைப்பார்-மனதில்

   மதமான பேயிடம் எண்ணம் வைப்பார்!

சனியெனப் பரிவாரச் சங்கம் வைப்பார்-

காசி    சங்கமம் என்றே தமிழ ழிப்பார்!

பன்முகத் தன்மைக்கு வேட்டு வைப்பார்-

இந்தியப்    பண்பாட்டு முகத்திலே சூட்டை வைப்பார்!

ஒன்றாக இருப்பதை ஒழிக்கப் பார்ப்பார்-

அவர்     உடலெலாம்  விடமதைக் கக்கி நிற்பார்!  

கடவுளைக் கூடப் பிரித்து வைப்பார்-

கோயில்    கருவறை தன்னிலே கயமை செய்வார்!

மூடத் தனத்திலே மூழ்கி நிற்பார்-

பிறர்     மூளையில் அதனைத் திணிக்கப் பார்ப்பார்!

        பொய்யே வாழ்வெனப்  போற்றிக் கொள்வார்-

நாம்      போற்றிடும் வாய்மையைத் தூற்றிச் செல்வார்!

கயமைக் குணத்தினால்  கலகம் செய்வார் -

அந்த      கழிவுகள்  தொடர்ந்தால் எதையும்  செய்வார்!